Wednesday, November 17, 2010

project பூதங்கள்

உங்கள் பிள்ளைகள் cbse பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும், englishஇல் பொளந்து கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டவரா நீங்கள். அய்யோ நாம தான் corporation school-la படிச்சோம் நம்ம பிள்ளையாவது படிக்கட்டுமேன்னு நினைச்சீங்களா ! அப்படி நினச்சுதான் நானும் போட்டேங்க. [ ஆனா அதுக்கே அரசு துறையில நல்ல வேலைல நல்ல சம்பள்ளத்துல தான் இருக்கோம்] ஆனா நடக்கறதே வேறங்க. CCE - ஒண்ணு வந்திருக்கு பாருங்க. project project-nnu சொல்றாங்க பாஸு. அட, இது ஒண்ணும் software project இல்லப்பா. எனக்கு தெரிஞ்சு ப்ளஸ் டூ படிக்கும் போது எதோ ரெண்டு assignment பண்ணதா ஞாபகம். இப்போ மூணாங்க்ளாஸ் படிக்கற பசங்களுக்கு கொடுத்து இருக்க சில project-அ பாருங்க. சும்மா சாம்பிளுக்கு -
1. ரெண்டு மூணு வாரத்துக்கு வானிலை முன்னறிவிப்பு பத்தி தொடர்ந்து கவனிச்சு ஒரு அறிக்கை தயார் பண்ணணும்.[ அட அந்த வேலைய நாம பண்ணிட்டா அப்பறம் ரமணணுக்கு யார் வேலை கொடுப்பாங்க ]
2.இந்தியாவுல இப்போ எவ்வளவு POPULATION. எந்த எந்த மாநிலத்துல எவ்வளவு பேர் இருக்காங்க அதுக்கு ஒரு detailed report. [ இதுக்கு census dept ல வேலைக்கு சேர்ந்திருக்கலாமே]
இதெல்லாம் எங்கே இருந்து எடுக்கறது. நீங்கல்லாம் parent-a இருக்கவே லாயக்கில்லை. உங்களுக்கு நெட் பார்க்க தெரியாதா ? ப்ரௌஸ் பண்ண தெரியதா ? ஈ மெயில் கிடையாதா ? அய்யோ ! உங்க வாழ்க்கையே waste. முதலில் உங்க பர்ஸ் கனமாக இருக்கா ?
A4 sheet, marker pens, colour pencils, crayons, scetch pens, stick file, flat file,gum, fevicol, stickers, pictures etc.etc.etc.,எல்லாம் வாங்கணும்.  இனி stationery shopகளிலும் credit card, debit card வாங்க சொல்லணும். பர்ஸ காலி பண்ணி, அதுவும் பத்தாம பக்கத்துல இருக்க ATM la withdraw பண்ணி பாதி கடைய வீட்டுக்கு கொண்டு வந்தச்சா ? இனி தினமும் ரெண்டு மணி நேரம் நெட்-ல உக்காந்து படிங்க ! நெட் இருந்தா     மட்டும் போதாது தம்பி, அதுல தேடுற தெறமை வேணும். அதுவும் இல்லயா ? நீங்க படு waste. நல்ல வேளை கிச்சா போன்ற மென்பொருள் பற்றி நன்கறிந்த தினமும் தொழில் நுட்பம் பற்றி படிக்கும் அறிவார்ந்த நண்பர்கள் இருப்பதால் நான் தப்பித்தேன். பக்கத்தில் படுத்திருக்கும் பிள்ளையின் முகம் கூட கனவில் வருவதில்லை. இந்த project பூதங்கள் தான் வருகின்றன.எந்த தொல்லையும் வேண்டாமா ? பேசாமல் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து விடலாம். அங்கே எல்லாம் இந்த வேலைகளை ஆசிரியர்கள் தான் செய்கிறார்கள். காசும் மிச்சம்.
எனக்கென்னவோ அடுத்த முறை அவர்கள் கீழ்கண்ட project-கள் கொடுப்பர்களோ என தோன்றுகிறது
1. ஒபாமா அமெரிக்க பொருளாதாரத்தை முன்னேற்ற என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் ? அமர்த்த்யா சென்-நுடன் கலந்து ஆலொசித்து ஒரு அறிக்கை சமர்பிக்கவும்.
2.pascal - விதியை போல் புதியதொரு விதி கண்டு பிடித்து அதற்கு patent-ம் பெற்று- 10 நாட்களுக்குள் பள்ளிக்கு கொண்டு வரவும்.
      இப்பவே yahoo help-ல கேட்டு வெச்சா நம்ம வலைத் தள புலிகள் இதற்கும் ஒரு வழி சொல்லாமலா போய்டுவாங்க !

Tuesday, November 16, 2010

மனதை கவர்ந்த மைனா!!

கதை - வழக்கமான ஆனால் மஸாலா இல்லாத கிராமத்து காதல். அதற்கே உரிய எதிர்ப்புகள், மண் மணம் மாறா மக்கள், வசனந்கள் , சின்ன வயசு காதல், தடம் மாரி போகும் காதலர்களின் வாழ்க்கையில் விளையாடும் விதி, மனதை பிழியும் அதிரடி climax.
எல்லாம் வழக்கமான தமிழ் சினிமா போல தான். ஆனால் அதை அற்புதமான திரைக்கதையின் மூலம் பிரமாதமாக சொல்லி இருக்கும் ப்ரபு சாலமன் குழுவிற்கு ஒரு ஸபாஷ் போடலாம். சுருளி அடாவடி சிறுவன், பள்ளிக்கூடம் கட் அடித்து ஊர் சுற்றும் போக்கிரி, அப்பா ஒரு சீட்டாடி,  சந்தர்ப்ப வசத்தால் அனாதை ஆகும் மைனாவையும் அவள் அம்மாவையும் ஆதரிக்கிறான். சின்ன வயதில் இருந்தே மைனாவை பொத்தி பாதுகாக்கிறான். அவள் அம்மாவை அக்கா அக்கா என்று பாசத்தோடு வளைய வருகிறான். அவளும் மருமகனே, மருமகனே என்று உரிமை கொண்டாடுகிறாள். ஆனால் அதே சுருளி வளர்ந்து அவள் பெண்ணை கேட்கும் பொழுது வெடித்து எழுந்து தகராறு செய்கிறாள். அவள் கொடுக்கும் போலீஸ் கம்ப்ளைன்டில் உள்ளே போகும் சுருளி 15 நாள் தண்டனை காலம் முடியும் முன்பே தீபாவளிக்கு முன் தினம் இரவு மைனா-வின் திருமண ஏற்பாட்டை கேட்டு தப்பித்து வர, ஜைலர் பாஸ்கர், ஸுப்-ஜைலர் ராமையா இருவருக்கும் தீபாவளி தொலைத்து சுருளியை தேடி மலை பயணம் மேற்கொள்ள, கதை சூடு பிடிக்கிறது. ஒரு வழியா சுருளிய பிடித்து அவனோடு மைனாவும் வர சுருளி மீது செம்ம கடுப்பில் இருக்கும் ஜைலரும் சப்-ஜைலரும் அவர்களோடு செய்யும் பயணத்தின் முடிவில் அவர்களின் வெள்ளந்தி மனதையும், காதலையும் புரிந்து கொள்ள ஆனால் விதியின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது. அற்புதமான ஒரு travelling ஸ்க்ரிப்ட்.
உண்மையான ஹீரோ காமிரா தான். மனித காலடியே படாத பச்சை பசேல் இடங்கள், ஒத்தை அடி பாதையின் இரு புறமும் காமிராவை தேய்த்து செல்லும் மரக் கிளைகள், பள்ள தாக்குகள் என இயற்கை அழகை அள்ளி வந்திருக்கிறது காமிரா. சில நேரங்களில், ஒரு வேளை எந்த shotஐ மரக்கிளையில் தொங்கி கொண்டு எடுத்திருப்பார்களோ என்று சந்தேகப்படும்படியான பயந்கரமான ஷாட்-கள்.அற்புதமான துல்லியமான ஒளிப்பதிவு.
வித்தார்த் கூத்து பட்டறை தயாரிப்பாம். பார்த்தாலே தெரிகிறது. கொச கொச தாடியும் அலை பாயும் பரட்டை தலையும், அற்புதமான பாடி language, தெனாவட்டு நடையும் ப்ரமாத படுத்தி இருக்கிறார். மேக்கப் இல்லாத மைனா - சிந்து சமவெளி-யில் நடித்த அந்த அமலாவா... நம்ப முடியவில்லை. கண்கள் படம் முழுதும் ஆயிரம் கதை பேசுகின்றன.
கதையை தூக்கி நிறுத்துபவர்கள் ரெண்டு பேர். ஒருவர் சேது..ஜைலர் பாஸ்கர்-ஆக. பிடாரி மனைவியையும் அவள் வீட்டாரையும் சமாளிக்கும் அதே நேரம் கடமை தவறாத போலீஸாக எப்பொழுதும் இறுக்கமான முகத்துடன், சமயம் கிடைக்கும் பொழுது வெடிக்கும் மனிதனாக சேது நல்ல சாய்ஸ். பார்க்க பொன்வண்ணன் தம்பி போல இருக்கிறார்.  பணக்கார வீட்டு அடாவடி மனைவி , குடும்பத்தின் ஒரே பெண்ணான அவள் பேச்சுக்கு பூம் பூம் மாடு போல தலை ஆட்டி மாபிள்ளையை மிரட்டும் ரவுடி அண்ணன்கள், நாத்தி-யை பிடிக்காவிட்டாலும் புருஷனுக்கு பயந்து கொண்டு ஆமாம் சாமி போடும் மதனிக்கள், கண்களாலும் முக பாவனைகளாலும் ஜைலர் கணவனை மிரட்டி அடக்கும் மனைவி [ ஸுஸன்],எல்லா characterகளும் முத்திரை பதிக்கிறார்கள். இன்னும் படம் முழுக்க இது போல நெறைய characters  தெனாவட்டு பிடித்த தண்ட சோறு சுருளியின் அப்பா, மைனாவின் அம்மா, குழைவதாகட்டும், கண்களிலேயே மிரட்டுவதாகட்டும், பொந்கி எழுவதாகட்டும் அந்த அம்மா character செய்யும் பூவிதா கலக்குகிறார். ஸ்டூல் போட்டு பஸ்ஸில் ஏறும் குள்ள மனிதன், தண்ணி அடித்து விட்டு பேசும் பயணி.. என ஒரே ஒரு ஸீனில் தலை காட்டும் ஒவ்வொரு characterருமே அற்புதமா செதுக்கபட்டிருக்கிறது.

Next year ஃபிலிம் ஃபேர், விஜய் டிவி-க்களின் ஒட்டு மொத்த சாய்ஸ் for supporting actor, தம்பி ராமையா தான். மனுஷன் என்னமா கலக்குறார். அந்காடி தெருவில் சோடா புட்டி மேனேஜர்-ஆகவும், நெறைய படந்களில் சின்ன சின்ன காமெடி ரோல்-களிலும் வந்த ஆளா அது. நிமிடந்களில் முக பாவம் மாற்றி, காமெடி, வன்மம், க்ரோதம், நெகிழ்ச்சி, சோகம் என நவரசந்களையும் மனுஷன் பொளந்து கட்றார். Hats Off. நான் பயந்கர fan ஆயிட்டேன். காமெடிக்கு என தனி டிராக் இல்லை. கதையோடு இழைந்த காமெடி படத்தின் பலம். 'புலிய- பார்த்துட்டு ஒன்னுக்கு கூட போகலேன்னா புலிக்கு என்ன மரியாதை'  ' தீபாவளிக்கு கறி சோறு சாப்பிடணும் தான்; ஆனா நம்ம கறிய சாபிட்டுட்டு அதுகள் [அனிமல்ஸ்] தீபாவளி கொண்டாடிட்டா என்ன பண்றது' என்பது போன்ற வெடி சிரிப்புகள் படம் முழுக்க நெறைய.. வசனம் யாரோ தெரியவில்லை.
படத்தில் நெறைய லாஜிக் பொத்தல்கள். மலை ஊரிலேயே பிறந்து வளர்ந்த ஒருவனுக்கு ஏன் மற்றொருவர் வழி காட்ட வேண்டும்? ஹீரோயினை ஏன் ஜைலர் தன் வீட்டுக்கு வேற சாய்ஸ் இருக்கும் போது அழைத்து செல்ல வேண்டும்? எத்தனையோ தமிழ் படந்களில் பார்த்து சலித்த- படித்த ஹீரோயினை மூட்டை தூக்கும் படிக்காத ஹீரோ. அவன உருகி உருகி காதலிக்கும் ஹீரோயின். இன்னும் சொல்லலாம். ஆனால் குறை என்னவென்று சொல்ல வேண்டுமென தேடினால் மட்டுமே இவை கண்ணுக்கு தெரியும். மண் மணத்தோடு எழுதப்பட்ட அற்புதமான பாடல் வரிகள். [ யுக பாரதி என கேள்விபட்டேன்]
  படத்தின் ஒரே பலவீனம் இசை. சன் டிவி உபயத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ஆகி விடும். தனியாக FM-இல் கேட்க, CD-யில் கேட்க பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் படத்தின் நேடிவிடி-க்கு பாடல்களும் சரி, BGMமும் சரி ஒட்டவே இல்லை. இமான் நெறைய கிராமிய சந்கீதம் கேட்க வேண்டும்.
மொத்தத்தில் மைனா என் மனச கவர்ந்திடுச்சு நைனா………….