என்ன எழுதுவது எதைப் பற்றி எழுதுவது என்று யோசிக்கவே சோம்பல் பட்டுக் கொண்டு இருந்த போது
வழக்கு எண் 18/9 பார்க்க நேர்ந்தது. . சரி மறுபடியும் சினிமா விமர்சனமா
என யோசிக்காமல்
எழுதியே விடலாம் என்று முடிவு செய்தேன்.
தலைப்பைப் போலவே படமும் மிகவும் வித்யாசமானது தான். பிடிக்காத பெண்ணின்
முகத்தை ஆசிட் ஊற்றி
சிதைப்பது என்ற குரூரமான பழக்கம் நம் சமூகத்தில் உள்ளது. கதைக்கான ஒன் லைன் அது தான். அதை மட்டும் வைத்துக் கொண்டு நம் சமூகத்தில் நடக்கும் பல் வேறு அவலங்களை படம் படம் பிடித்து காட்டுகிறது. பணமும் அதிகாரமும் இருப்பவன் செய்யும் அழிச்சாட்டியங்கள், ஏழைகளாய்ப் பிறந்ததாலேயே அவர்கள் இச்சமூகத்தில் படும் அவலங்கள், ஊடகங்களும், இணையமும் சீரழித்து வைத்திருக்கும் மாணவ சமுதாயம், அரசியல்வாதிகளின் போக்கு, விவசாய நிலங்களை சூறையாடும் real estate brokerகள் கந்து வட்டி கொடுமை, வடனாட்டு கம்பெனிகளுக்கு கொத்தடிமைகளாய்
விற்க்கப்படும் சிறார்கள்,
சிதைந்து வரும் கூத்து கலை என எல்லா விஷயங்களையும் பிரச்சார நெடி இல்லாமல் , தனியே துருத்திக் கொண்டிராமல் , கதை போகும் போக்கிலேயே சொல்லி இருக்கும் விதம் அருமை. platfora-க் கடையில் வெலை செய்யும் வேலு, அவன் காதலிக்கும் வேலைக்காரப் பெண் ஜோதி, பணக்காரன் தினேஷ், அதே apartment-ல் வசிக்கும் பள்ளி மாணவி ஆர்த்தி, இந்த வழக்கை விசாரிக்கும் inspector இவர்கள் 5 பேரை சுற்றி தான் கதை பின்னப்படுள்ளது. முதல் பாதியில் வேலுவின் பார்வையில் வரும் கதையில் மற்ற இரண்டு பாத்திரங்களும் பின்புலமாக வருவதும், அதே விஷயம் ஆர்த்தியின் பார்வையில் வரும் போது ஆர்த்தியும் தினேஷும் முன்னிலைபடுத்தப்பட்டு மற்ற இருவரும் பின்புலமாக வரும் technic ரசிக்க வைக்கிறது. அப்பாவி வெள்ளந்தி பையன் கேரக்டருக்கு ஸ்ரீ சரியான பொருத்தம். அதே போல வேலைக்காரியாக அதிகம் பேசாத ஊர்மிளா, பணக்காரத் திமிர் பிடித்த விடலைப் பையனாக வரும் மிதுன், வீட்டிற்கு பயந்தும் பயப்படாமலும் இளமைத் துணிச்சலில் தடுமாறும் பெண்ணாக மனிஷா,அதிகாரமும், ஆண்வமும் கலந்து வஞ்சகமும், நைச்சியமுமாக பேசும் inspector, கூத்துக் கலைஞன் என எல்லோரும் வெளுத்து வாங்குகிறார்கள். சின்ன சின்ன character-களில் வரும் தாடிக்கார முதலாளி, ரோசி அக்கா, ஜோதியின் அம்மா, மிதுனின் அம்மா போன்றொரும் அற்புதமாக நடித்து இருக்கிறார்கள். குட்டி குட்டி நுணுக்கங்கள் ரசிக்கத்தக்க காட்சிகள் படத்தில் நிறைய. ஏரியல் வியூவில் வரும் முதல் காட்சி -- பின்னால் மொட்டை மாடி தினேஷின் வியூ என்பது தெரிய வரும் இடம், ரோசி அக்கா குடிப்பதை நிறுத்தி விடும் என்பதை symbolic-ஆக காட்டும் இடம், ஹீரோ பட்டினியால் தவிக்கும் போது நகர்ந்து செல்லும் tupperware tiffin boxgalin லோ ஆங்கிள் போன்றவை. கொஞ்சம் அசந்தாலும் சுலபமாய் ஆபாசத்தை தொட்டு விடும் சாத்தியமுள்ள திரைக்கதையில், மிக decent-ஆக அதை கையாண்டிருக்கும் இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு ஒரு சபாஷ். பின்ணணி இசைக் கோர்ப்பின்றி வரும் " வானத்தையும் எட்டி புடிப்பேன்" பாடல் சுகம். commercial cinema-வுக்கென எந்தவொரு compromise-ம் செய்து கொள்ளாமல் மிக நேர்மையாய் ஒரு படம் தந்தமைக்கு வழக்கு எண் 18/9 குழுவினருக்கு என் வந்தனம்.
வழக்கு எண் 18/9 பார்க்க நேர்ந்தது. . சரி மறுபடியும் சினிமா விமர்சனமா
என யோசிக்காமல்
எழுதியே விடலாம் என்று முடிவு செய்தேன்.
தலைப்பைப் போலவே படமும் மிகவும் வித்யாசமானது தான். பிடிக்காத பெண்ணின்
முகத்தை ஆசிட் ஊற்றி
சிதைப்பது என்ற குரூரமான பழக்கம் நம் சமூகத்தில் உள்ளது. கதைக்கான ஒன் லைன் அது தான். அதை மட்டும் வைத்துக் கொண்டு நம் சமூகத்தில் நடக்கும் பல் வேறு அவலங்களை படம் படம் பிடித்து காட்டுகிறது. பணமும் அதிகாரமும் இருப்பவன் செய்யும் அழிச்சாட்டியங்கள், ஏழைகளாய்ப் பிறந்ததாலேயே அவர்கள் இச்சமூகத்தில் படும் அவலங்கள், ஊடகங்களும், இணையமும் சீரழித்து வைத்திருக்கும் மாணவ சமுதாயம், அரசியல்வாதிகளின் போக்கு, விவசாய நிலங்களை சூறையாடும் real estate brokerகள் கந்து வட்டி கொடுமை, வடனாட்டு கம்பெனிகளுக்கு கொத்தடிமைகளாய்
விற்க்கப்படும் சிறார்கள்,
சிதைந்து வரும் கூத்து கலை என எல்லா விஷயங்களையும் பிரச்சார நெடி இல்லாமல் , தனியே துருத்திக் கொண்டிராமல் , கதை போகும் போக்கிலேயே சொல்லி இருக்கும் விதம் அருமை. platfora-க் கடையில் வெலை செய்யும் வேலு, அவன் காதலிக்கும் வேலைக்காரப் பெண் ஜோதி, பணக்காரன் தினேஷ், அதே apartment-ல் வசிக்கும் பள்ளி மாணவி ஆர்த்தி, இந்த வழக்கை விசாரிக்கும் inspector இவர்கள் 5 பேரை சுற்றி தான் கதை பின்னப்படுள்ளது. முதல் பாதியில் வேலுவின் பார்வையில் வரும் கதையில் மற்ற இரண்டு பாத்திரங்களும் பின்புலமாக வருவதும், அதே விஷயம் ஆர்த்தியின் பார்வையில் வரும் போது ஆர்த்தியும் தினேஷும் முன்னிலைபடுத்தப்பட்டு மற்ற இருவரும் பின்புலமாக வரும் technic ரசிக்க வைக்கிறது. அப்பாவி வெள்ளந்தி பையன் கேரக்டருக்கு ஸ்ரீ சரியான பொருத்தம். அதே போல வேலைக்காரியாக அதிகம் பேசாத ஊர்மிளா, பணக்காரத் திமிர் பிடித்த விடலைப் பையனாக வரும் மிதுன், வீட்டிற்கு பயந்தும் பயப்படாமலும் இளமைத் துணிச்சலில் தடுமாறும் பெண்ணாக மனிஷா,அதிகாரமும், ஆண்வமும் கலந்து வஞ்சகமும், நைச்சியமுமாக பேசும் inspector, கூத்துக் கலைஞன் என எல்லோரும் வெளுத்து வாங்குகிறார்கள். சின்ன சின்ன character-களில் வரும் தாடிக்கார முதலாளி, ரோசி அக்கா, ஜோதியின் அம்மா, மிதுனின் அம்மா போன்றொரும் அற்புதமாக நடித்து இருக்கிறார்கள். குட்டி குட்டி நுணுக்கங்கள் ரசிக்கத்தக்க காட்சிகள் படத்தில் நிறைய. ஏரியல் வியூவில் வரும் முதல் காட்சி -- பின்னால் மொட்டை மாடி தினேஷின் வியூ என்பது தெரிய வரும் இடம், ரோசி அக்கா குடிப்பதை நிறுத்தி விடும் என்பதை symbolic-ஆக காட்டும் இடம், ஹீரோ பட்டினியால் தவிக்கும் போது நகர்ந்து செல்லும் tupperware tiffin boxgalin லோ ஆங்கிள் போன்றவை. கொஞ்சம் அசந்தாலும் சுலபமாய் ஆபாசத்தை தொட்டு விடும் சாத்தியமுள்ள திரைக்கதையில், மிக decent-ஆக அதை கையாண்டிருக்கும் இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு ஒரு சபாஷ். பின்ணணி இசைக் கோர்ப்பின்றி வரும் " வானத்தையும் எட்டி புடிப்பேன்" பாடல் சுகம். commercial cinema-வுக்கென எந்தவொரு compromise-ம் செய்து கொள்ளாமல் மிக நேர்மையாய் ஒரு படம் தந்தமைக்கு வழக்கு எண் 18/9 குழுவினருக்கு என் வந்தனம்.
nethiyadi comment. paarka thoondum vagaiyil yezhudhapattuladhu.
ReplyDeleteungal aakkam mElum thodara vEndudhal.
Srinivasan V
ellam thangal dhayavu nanba.nanri.
Delete