கதை - வழக்கமான ஆனால் மஸாலா இல்லாத கிராமத்து காதல். அதற்கே உரிய எதிர்ப்புகள், மண் மணம் மாறா மக்கள், வசனந்கள் , சின்ன வயசு காதல், தடம் மாரி போகும் காதலர்களின் வாழ்க்கையில் விளையாடும் விதி, மனதை பிழியும் அதிரடி climax.
எல்லாம் வழக்கமான தமிழ் சினிமா போல தான். ஆனால் அதை அற்புதமான திரைக்கதையின் மூலம் பிரமாதமாக சொல்லி இருக்கும் ப்ரபு சாலமன் குழுவிற்கு ஒரு ஸபாஷ் போடலாம். சுருளி அடாவடி சிறுவன், பள்ளிக்கூடம் கட் அடித்து ஊர் சுற்றும் போக்கிரி, அப்பா ஒரு சீட்டாடி, சந்தர்ப்ப வசத்தால் அனாதை ஆகும் மைனாவையும் அவள் அம்மாவையும் ஆதரிக்கிறான். சின்ன வயதில் இருந்தே மைனாவை பொத்தி பாதுகாக்கிறான். அவள் அம்மாவை அக்கா அக்கா என்று பாசத்தோடு வளைய வருகிறான். அவளும் மருமகனே, மருமகனே என்று உரிமை கொண்டாடுகிறாள். ஆனால் அதே சுருளி வளர்ந்து அவள் பெண்ணை கேட்கும் பொழுது வெடித்து எழுந்து தகராறு செய்கிறாள். அவள் கொடுக்கும் போலீஸ் கம்ப்ளைன்டில் உள்ளே போகும் சுருளி 15 நாள் தண்டனை காலம் முடியும் முன்பே தீபாவளிக்கு முன் தினம் இரவு மைனா-வின் திருமண ஏற்பாட்டை கேட்டு தப்பித்து வர, ஜைலர் பாஸ்கர், ஸுப்-ஜைலர் ராமையா இருவருக்கும் தீபாவளி தொலைத்து சுருளியை தேடி மலை பயணம் மேற்கொள்ள, கதை சூடு பிடிக்கிறது. ஒரு வழியா சுருளிய பிடித்து அவனோடு மைனாவும் வர சுருளி மீது செம்ம கடுப்பில் இருக்கும் ஜைலரும் சப்-ஜைலரும் அவர்களோடு செய்யும் பயணத்தின் முடிவில் அவர்களின் வெள்ளந்தி மனதையும், காதலையும் புரிந்து கொள்ள ஆனால் விதியின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது. அற்புதமான ஒரு travelling ஸ்க்ரிப்ட்.
உண்மையான ஹீரோ காமிரா தான். மனித காலடியே படாத பச்சை பசேல் இடங்கள், ஒத்தை அடி பாதையின் இரு புறமும் காமிராவை தேய்த்து செல்லும் மரக் கிளைகள், பள்ள தாக்குகள் என இயற்கை அழகை அள்ளி வந்திருக்கிறது காமிரா. சில நேரங்களில், ஒரு வேளை எந்த shotஐ மரக்கிளையில் தொங்கி கொண்டு எடுத்திருப்பார்களோ என்று சந்தேகப்படும்படியான பயந்கரமான ஷாட்-கள்.அற்புதமான துல்லியமான ஒளிப்பதிவு.
வித்தார்த் கூத்து பட்டறை தயாரிப்பாம். பார்த்தாலே தெரிகிறது. கொச கொச தாடியும் அலை பாயும் பரட்டை தலையும், அற்புதமான பாடி language, தெனாவட்டு நடையும் ப்ரமாத படுத்தி இருக்கிறார். மேக்கப் இல்லாத மைனா - சிந்து சமவெளி-யில் நடித்த அந்த அமலாவா... நம்ப முடியவில்லை. கண்கள் படம் முழுதும் ஆயிரம் கதை பேசுகின்றன.
கதையை தூக்கி நிறுத்துபவர்கள் ரெண்டு பேர். ஒருவர் சேது..ஜைலர் பாஸ்கர்-ஆக. பிடாரி மனைவியையும் அவள் வீட்டாரையும் சமாளிக்கும் அதே நேரம் கடமை தவறாத போலீஸாக எப்பொழுதும் இறுக்கமான முகத்துடன், சமயம் கிடைக்கும் பொழுது வெடிக்கும் மனிதனாக சேது நல்ல சாய்ஸ். பார்க்க பொன்வண்ணன் தம்பி போல இருக்கிறார். பணக்கார வீட்டு அடாவடி மனைவி , குடும்பத்தின் ஒரே பெண்ணான அவள் பேச்சுக்கு பூம் பூம் மாடு போல தலை ஆட்டி மாபிள்ளையை மிரட்டும் ரவுடி அண்ணன்கள், நாத்தி-யை பிடிக்காவிட்டாலும் புருஷனுக்கு பயந்து கொண்டு ஆமாம் சாமி போடும் மதனிக்கள், கண்களாலும் முக பாவனைகளாலும் ஜைலர் கணவனை மிரட்டி அடக்கும் மனைவி [ ஸுஸன்],எல்லா characterகளும் முத்திரை பதிக்கிறார்கள். இன்னும் படம் முழுக்க இது போல நெறைய characters தெனாவட்டு பிடித்த தண்ட சோறு சுருளியின் அப்பா, மைனாவின் அம்மா, குழைவதாகட்டும், கண்களிலேயே மிரட்டுவதாகட்டும், பொந்கி எழுவதாகட்டும் அந்த அம்மா character செய்யும் பூவிதா கலக்குகிறார். ஸ்டூல் போட்டு பஸ்ஸில் ஏறும் குள்ள மனிதன், தண்ணி அடித்து விட்டு பேசும் பயணி.. என ஒரே ஒரு ஸீனில் தலை காட்டும் ஒவ்வொரு characterருமே அற்புதமா செதுக்கபட்டிருக்கிறது.
Next year ஃபிலிம் ஃபேர், விஜய் டிவி-க்களின் ஒட்டு மொத்த சாய்ஸ் for supporting actor, தம்பி ராமையா தான். மனுஷன் என்னமா கலக்குறார். அந்காடி தெருவில் சோடா புட்டி மேனேஜர்-ஆகவும், நெறைய படந்களில் சின்ன சின்ன காமெடி ரோல்-களிலும் வந்த ஆளா அது. நிமிடந்களில் முக பாவம் மாற்றி, காமெடி, வன்மம், க்ரோதம், நெகிழ்ச்சி, சோகம் என நவரசந்களையும் மனுஷன் பொளந்து கட்றார். Hats Off. நான் பயந்கர fan ஆயிட்டேன். காமெடிக்கு என தனி டிராக் இல்லை. கதையோடு இழைந்த காமெடி படத்தின் பலம். 'புலிய- பார்த்துட்டு ஒன்னுக்கு கூட போகலேன்னா புலிக்கு என்ன மரியாதை' ' தீபாவளிக்கு கறி சோறு சாப்பிடணும் தான்; ஆனா நம்ம கறிய சாபிட்டுட்டு அதுகள் [அனிமல்ஸ்] தீபாவளி கொண்டாடிட்டா என்ன பண்றது' என்பது போன்ற வெடி சிரிப்புகள் படம் முழுக்க நெறைய.. வசனம் யாரோ தெரியவில்லை.
படத்தில் நெறைய லாஜிக் பொத்தல்கள். மலை ஊரிலேயே பிறந்து வளர்ந்த ஒருவனுக்கு ஏன் மற்றொருவர் வழி காட்ட வேண்டும்? ஹீரோயினை ஏன் ஜைலர் தன் வீட்டுக்கு வேற சாய்ஸ் இருக்கும் போது அழைத்து செல்ல வேண்டும்? எத்தனையோ தமிழ் படந்களில் பார்த்து சலித்த- படித்த ஹீரோயினை மூட்டை தூக்கும் படிக்காத ஹீரோ. அவன உருகி உருகி காதலிக்கும் ஹீரோயின். இன்னும் சொல்லலாம். ஆனால் குறை என்னவென்று சொல்ல வேண்டுமென தேடினால் மட்டுமே இவை கண்ணுக்கு தெரியும். மண் மணத்தோடு எழுதப்பட்ட அற்புதமான பாடல் வரிகள். [ யுக பாரதி என கேள்விபட்டேன்]
படத்தின் ஒரே பலவீனம் இசை. சன் டிவி உபயத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ஆகி விடும். தனியாக FM-இல் கேட்க, CD-யில் கேட்க பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் படத்தின் நேடிவிடி-க்கு பாடல்களும் சரி, BGMமும் சரி ஒட்டவே இல்லை. இமான் நெறைய கிராமிய சந்கீதம் கேட்க வேண்டும்.
மொத்தத்தில் மைனா என் மனச கவர்ந்திடுச்சு நைனா………….
இவ்வளவு சொல்லியும் பட முடிவை சொல்லாதது தான் உன்னோட விமரிசனத்தோட பலம்!!
ReplyDeleteThough as a friend of yours, i have enjoyed so many film reviews, nice to see the same on blog. Thanks to your friend Kicha.
ReplyDeletethank u very much bhavani.all credits to him.thanksda
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI do not know whether you are attracted by the film 'MAINA' or not. You have started attracting people all over with your writing and comments. Happy to visit your blog.
ReplyDelete